சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – IPL 2023க்கு முன் தக்கவைக்கப்படும் 5 வீரர்கள்!

0
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு - IPL 2023க்கு முன் தக்கவைக்கப்படும் 5 வீரர்கள்!
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – IPL 2023க்கு முன் தக்கவைக்கப்படும் 5 வீரர்கள்!

வரவிருக்கும் ஐபிஎல் 2023 போட்டிக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி முக்கியமான சில வீரர்களை தக்கவைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள 5 வீரர்களின் பெயர்களை இப்பதிவில் பார்க்கலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

சமீபத்தில் முடிவடைந்த இந்தியன் பிரீமியர் லீக்கின் 15வது சீசனில் அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் (GT) தனது முதல் IPL கோப்பையை வென்றது. இந்த சீசனில் நடப்பு சாம்பியனான சென்னை அணி நான்கு லீக் போட்டிகளில் வெற்றி பெற்று 9வது இடத்தில் இருந்தது. மொத்தத்தில் இந்த சீசன் சென்னை அணிக்கு சிறப்பாக அமையவில்லை. இதை தொடர்ந்து IPL 2023 சீசன் வரும் ஏப்ரல் முதல் ஜூன் மாதங்களில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஏலத்திற்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய சில வீரர்கள் தக்கவைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
எம்எஸ் தோனி:

ஐபிஎல் 2023 சீசனில் எம்எஸ் தோனி ஒரு வீரராகவும், கேப்டனாகவும் இருப்பார். இதனால் புதிய சீசனில் சென்னை அணியில் எம்எஸ் தோனி கண்டிப்பாக இடம்பெறுவார் என்பதும் அவர் அந்த சீசனில் இருந்து ஓய்வு பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

ருதுராஜ் கெய்க்வாட்:

ஐபிஎல் 2023 ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே நிர்வாகம் தக்கவைக்கும் இரண்டாவது வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆவார். ஐபிஎல் 2022 சீசன் சிஎஸ்கே தொடக்க பேட்ஸ்மேனுக்கு ஒப்பீட்டளவில் சரியாக அமையவில்லை. என்றாலும் அவர் 13 இன்னிங்ஸ்களில் விளையாடி 366 ரன்களை எடுத்துள்ளார். இது முந்தைய இரண்டு சீசன்களின் அளவுகோலை விட சற்று குறைவு. இப்போது ஒரு தொடக்க பேட்ஸ்மேனாக அவரது திறனைக் கருத்தில் கொண்டு, சிஎஸ்கே அவரை முன்கூட்டியே தக்கவைக்கும்.

டெவோன் கான்வே:

ஜடேஜா கேப்டன் பதவியை விட்டுக்கொடுக்க ஒப்புக்கொண்டதை அடுத்து, இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக டெவோன் கான்வே விளையாட அனுமதிக்கப்பட்டார். நியூசிலாந்து வீரரான கான்வே ஆறு இன்னிங்ஸ்களில் விளையாடி மூன்று அரை சதங்களுடன் மொத்தம் 236 ரன்கள் எடுத்துள்ளார். அதனால் ஐபிஎல் 2023 ஏலத்திற்கு முன்னதாக டெவோன் கான்வேயை சிஎஸ்கே தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது.

தீபக் சாஹர்:

ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் தீபக் சாஹரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 கோடிக்கு வாங்கியது. ஆனால் காயம் காரணமாக ஐபிஎல் 2022 சீசனில் இருந்து முழுமையாக வெளியேற்றப்பட்ட அவர் அடுத்த சீசனிலும் சென்னை அணியில் இணைவார்.

ரவீந்திர ஜடேஜா:

இந்த ஐபிஎல் சீசன் ஜடேஜாவுக்கு கடினமான நேரமாக இருந்தது. நடப்பு சீசனின் இறுதி கட்டத்தில் காயம் காரணமாக விலகிய ஜடேஜா அடுத்த ஆண்டு சென்னை அணியில் இருக்க வாய்ப்புள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!