ரூ.50400/- ஊதியத்தில் புழல் மத்திய சிறையில் வேலை
சென்னை மாவட்டம் புழல் மத்திய சிறை-1ல் காலியாக உள்ள சமையலர் மற்றும் ஆற்றுப்படுத்துநர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது கடந்த வாரத்தில் தான் வெளியாகி இருந்தது. அதில் மேற்கூறப்பட்ட பணிகளுக்கு என தலா 01 பணியிடம் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | சென்னை மாவட்டம் புழல் மத்திய சிறை |
பணியின் பெயர் | சமையலர் மற்றும் ஆற்றுப்படுத்துநர் |
பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | 28.01.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
மத்திய சிறை காலிப்பணியிடங்கள்:
- சமையலர் – 01
- ஆற்றுப்படுத்துநர் – 01
வயது வரம்பு:
(அதிகப்பட்சமாக) எஸ்.சி./எஸ்.சி.ஏ-35, எஸ்.டி- 35, பிற்படுத்தப்பட்டோர் -32, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் – 32, ஓ.சி-30 இருத்தல் வேண்டும்.
கல்வி தகுதி:
சமையலர் (Cook):
- எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- சமையல் பணியில் இரண்டு வருடங்கள் குறையாமல் முன்அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
ஆற்றுப்படுத்துநர் (Counsellor):
Master Degree in Sociology/Psychology/Social Work Technical Counsel Experience in Mental Health institutions of Community Service முடித்திருக்க வேண்டும்.
மாத ஊதியம்:
- சமையலர் – ரூ.15900-50400/-
- ஆற்றுப்படுத்துநர் – ரூ.19500/-என்ற ஊதியம் தொகுப்பூதிய அடிப்படையில் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
சிறைக்கண்காணிப்பாளர், மத்திய சிறை-1, (தண்டனை) புழல், சென்னை- 66 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை 28.01.2021 அன்றுக்குள் அனுப்பிட வேண்டும். ஆனால் அந்த அவகாசம் நாளையோடு முடிவடைய உள்ளதால் விருப்பமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.