சென்னை பொதுமக்கள் கவனத்திற்கு – மழை, வெள்ளம் குறித்த புகார்கள் தெரிவிக்க எண்கள் அறிமுகம்!

0
சென்னை பொதுமக்கள் கவனத்திற்கு - மழை, வெள்ளம் குறித்த புகார்கள் தெரிவிக்க எண்கள் அறிமுகம்!
சென்னை பொதுமக்கள் கவனத்திற்கு - மழை, வெள்ளம் குறித்த புகார்கள் தெரிவிக்க எண்கள் அறிமுகம்!
சென்னை பொதுமக்கள் கவனத்திற்கு – மழை, வெள்ளம் குறித்த புகார்கள் தெரிவிக்க எண்கள் அறிமுகம்!

தமிழகத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் சென்னை மக்கள், மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் மழை, வெள்ள அபாயம் குறித்த புகார்களை தெரிவிக்க அரசு புகார் எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை பற்றி பார்ப்போம்.

பொதுமக்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் பாதிப்படைகின்றனர். அந்த நேரத்தில் அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்களை பாதுகாத்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை போன்ற மாநகரங்களில் மழைக்காலங்களில் ஏரி நீர் நிறைந்து மக்கள் வாழும் குடியேற்றங்களில் புகுந்து அவர்களின் உடமைகளை சேதப்படுத்தி வருகின்றன. ஏனெனில் ஏரி நீர் இருக்கும் பகுதிகளில் மிகவும் தாழ்வான பகுதிகளில் பொதுமக்கள் வசித்து வந்தனர். இதில் குறிப்பாக கடந்த 2015ம் ஆண்டு சென்னை நகரம் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

கடந்த 2015ம் ஆண்டு ஒரே நேரத்தில் கனமழை பெய்ததன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நிறைந்தது. அதனால் சென்னை நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரி அணை உடையாமல் இருக்க உபரி வெளியேற்றப்பட்டது. அதன்படி ஒரே நேரத்தில் 20 ஆயிரம் கன அடி அளவுக்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் சென்னை வாழ் மக்கள் தங்களின் வீடு மற்றும் உடைமைகளை இழந்தனர். இதையடுத்து தற்போது செம்பரம்பாக்கத்தில் இருந்து கடற்கரை வரை செல்லும் பாதை சீரமைக்கப்பட்டுள்ளதால் வெள்ள அபாயம் ஏற்படுவது குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

பெருகி வரும் ஆன்லைன் மோசடிகள் – பறிபோகும் பணம்! பொதுமக்களே உஷார்!

இதனை தொடர்ந்து தற்போது வெள்ள அபாயத்திலிருந்து பொது மக்களை மீட்டெடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னையில் மழை, வெள்ளம் குறித்த புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க மாவட்ட மையங்களை ஒருங்கிணைத்து அவசர கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் 24 மணி நேரம் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வெள்ளம் குறித்த புகார்களை தெரிவிக்க 1070, 1077, சென்னை மாநகராட்சி 1913, 9445869848 போன்ற இலவச எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!