சென்னை துறைமுக வேலைவாய்ப்பு 2021 – ரூ.1 லட்ச ஊதியம்..!
சென்னை துறைமுக கழகம் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Trainee Pilots காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பணிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
Chennai Port Trust வேலைவாய்ப்பு விவரங்கள்:
- சென்னை துறைமுக கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Trainee Pilots பணிக்காக 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் Certificate of Competency as Master (FG) பெற்றிருக்க வேண்டும்.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
- விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.1,00,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னை துறைமுக கழக விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 09.01.2022 ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் இப்பணிக்காக கால அவகாசம் முடிவடைவதால் விருப்பமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.