தமிழக பொது போக்குவரத்து முறையில் புதிய மாற்றம் – ஒரே பயணச்சீட்டு முறை அமல்?
சென்னையில் பல்வேறு வகையான போக்குவரத்தை ஒருங்கிணைத்து செயல்படுத்திடும் வகையில் ஒரே பயணச்சீட்டு முறை அமல்படுத்துவது குறித்து முதல்வர் தலைமையில் இன்று (நவ.17) ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது.
ஆலோசனை கூட்டம்:
சென்னையில் ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் முதல் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்த கூட்டமானது சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் தலைமையகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னைப் பெருநகர வளர்ச்சிக்குழுமம், மாநகர போக்குவரத்துக்கழகம், சென்னை மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
இந்த கூட்டத்தில் பல்வேறு வகையான போக்குவரத்தை ஒருங்கிணைத்து செயல்படுத்திடும் வகையில் ஒரே பயணச்சீட்டு முறை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற இருக்கிறது. மேலும் ஒரே பயணச்சீட்டில் மாநகர பேருந்துகள், சென்னை மெட்ரோ ரயில், புறநகர் ரயில்கள் என அனைத்திலும் பயணிகள் பயணிக்க இந்த முறை பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNDTE Diploma செமஸ்டர் தேர்வு அட்டவணை 2022 – வெளியீடு!
Exams Daily Mobile App Download
மேலும் 2010 ஆம் ஆண்டு போக்குவரத்து நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், ஒருங்கிணைக்கவும், கண்காணிக்கவும் போக்குவரத்து குழுமம் உருவாக்கப்பட்டது. அதில் 4 துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில் இந்த குழு மூலம் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை உள்ளடக்கிய 5,904 சதுர கி.மீ பரப்பளவை உள்ளடக்கி அங்கே போக்குவரத்து பிரச்சனைகள் குறித்து திட்டமிட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.