சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு – ‘இதை’ செய்தால் தொழில் உரிமம் ரத்து!
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் தொழில் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
பிளாஸ்டிக் தடை:
அன்றாட வாழ்க்கையில் நெகிழி பொருட்களின் பயன்பாடு பெருகியுள்ளது. இந்த நெகிழி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிறது. இவை எளிதில் மக்கும் தன்மை அற்றவை. நாம் பயன்படுத்தி ஒதுக்கி எறியப்படும் பிளாஸ்டிக் மண்ணில் புதையுண்டு மக்காமல் தங்கி விடுகிறது. இதனை உட்கொள்ளும் கால்நடைகளின் உணவு குழாய்கள் அடைக்கப்பட்டு இறக்க நேரிடுகிறது. மேலும் இந்த பிளாஸ்டிக் பைகள் கால்வாய்களில் அடைந்து கொண்டு நீரை போக விடாமல் தடுத்து சாலைகளில் நீர் தேக்கத்தை ஏற்படுத்துகிறது.
கொடநாடு பங்களா கொலை, கொள்ளை வழக்கு – செப். 2 க்கு விசாரணை ஒத்திவைப்பு!
இவ்வாறு தீங்கு விளைவிக்கும் நெகிழியை பயன்படுத்த கூடாது என்று தமிழக அரசு கடந்த 2019ம் ஆண்டு அறிவித்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1966, பிரிவு-5 ன் கீழ் ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதற்கு மாற்றாக வாழையிலை, பாக்குமர இலை, அலுமினியத்தாள், காகித சுருள், தாமரை இலை, கண்ணாடி மற்றும் உலோகத்தால் ஆன பொருட்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில், அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு தொழில் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் சென்னை மாநகரை அழகுபடுத்தவும், பசுமை பரப்பளவை அதிகரித்து சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மாநகராட்சியின் சார்பில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.