தமிழகத்தில் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கம் – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
கொரோனா காரணமாக விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கில் இருந்து தமிழகத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரயில் இயக்கம்
தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கில் இருந்து தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன் படி தற்போது பல விதமான சேவைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், பொது போக்குவரத்துகும் செயல்பட்டு வருகிறது. அதன் படி அனைத்து மாவட்டங்களிலும் 50% இருக்கை வசதிகளுடன் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தற்போது இயங்கி வருகிறது. இதை தொடர்ந்து சென்னையில் செயல்பட்டு வரும் மெட்ரோ ரயில்களின் இயக்க நேரம் அதிகரிக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தனியார் பேருந்துகள் இயக்கம் எப்போது? உரிமையாளர்கள் விளக்கம்!
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளில் இருந்து தற்போது படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து சென்னை மாநகரத்தில் மெட்ரோ ரயில் சேவைகளை அதிகரித்து, அதன் இயக்க நேரத்தை அதிகரிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் சென்னையில் நாளை (ஜூலை 12) முதல் அதிகாலை 5.30 லிருந்து இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில்களின் இயக்க நேரம் அதிகரிக்கப்பட உள்ளன.
விஜய் டிவி புதிய சீரியல் ‘தமிழும் சரஸ்வதியும்’ – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
தவிர தினசரி காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், 5 நிமிடம் மற்றும் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மேலும் பொது விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில், காலை 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை, ஒவ்வொரு 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். அரசு அறிவிப்பின் படி முறையான பயணிகள் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம் அணிந்து பயணம் செய்யாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, இதுவரை 40 பயணிகளிடம் ரூ.8 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.