சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – முழு ஊரடங்கு ரத்து எதிரொலி!
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியது. இந்த நிலையில் தற்போது தொற்று பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தளர்வுகள்
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் வேகமெடுக்க தொடங்கியது. அத்துடன் தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் பரவலும் வேகமாக பரவி வந்தது. அதனால் தொற்று பரவலை தடுப்பதற்காக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. இதில் குறிப்பாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் மாணவர்களின் நலன் கருதி மீண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜனவரி 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
IPL ரசிகர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – மீண்டும் இந்திய மண்ணில் கிரிக்கெட் தொடர்! BCCI அறிவிப்பு!
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் சற்று குறைந்து கொண்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் தற்போதுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 31ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதனால் ஆலோசனைகளை மேற்கொண்டு தமிழக முதல்வர் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்துள்ளார். அதன்படி அமலில் உள்ள இரவு நேர ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமைகளில் கடைபிடிக்கப்பட்ட முழு ஊரடங்கு இந்த வாரத்துடன் முடிவுக்கு வருகிறது. அத்துடன் முழு ஊரடங்கு நீக்கப்பட்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
முழு ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளதால் சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று முதல் வழக்கம்போல் இயக்கப்படும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பில், பயணிகள் அனைவரும் கட்டாயமான முறையில் முகக்கவசம் அணிய வேண்டும். அத்துடன் வார நாட்களில் காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் இயங்கும் என்றும் நெரிசல் மிகுந்த நேரங்களில் 5 நிமிட இடைவெளியுடன் ரயில்கள் இயக்கப்படும். இதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் 10 நிமிட இடைவெளியில் காலை 7 மணி முதல் 10 வரை ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது .