சென்னை மெரினா கடற்கரை மூடல் – மாவட்ட ஆணையர் ஆலோசனை!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த ஆலோசனை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 5441 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டு கொரோனாவை விட பல மடங்கு அதிகமாகும். குறிப்பாக சென்னை மாநகராட்சியில் கொரோனா பரவல் அதிகமாக பரவுவதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
TN Job “FB Group” Join Now
மேலும் அதனை கடைபிடிக்காதவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. வீடு வீடாக சென்று காய்ச்சல் அறிகுறிகளுடன் இருப்பவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். மேலும் மெரினா கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் அனுமதிப்பது குறித்து தலைமை செயலாளருடன் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு வர 3 மாநிலங்களுக்கு மட்டும் இ-பாஸ் கட்டாயமில்லை – அரசு அறிவிப்பு!!
மேலும் கடற்கரைகளில் காலை வேளைகளில் மட்டுமே அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக சென்னை மாவட்ட ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை மாநகராட்சியில் கொரோனா பரவலை தடுக்க கூடுதல் பேருந்துகளும் இன்று முதல் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.