சென்னையில் அதிரடியாக உயரும் சொத்துக்களின் விலை – அதிருப்தியில் சாமானிய மக்கள்!!

0
சென்னையில் அதிரடியாக உயரும் சொத்துக்களின் விலை - அதிருப்தியில் சாமானிய மக்கள்!!
சென்னையில் அதிரடியாக உயரும் சொத்துக்களின் விலை - அதிருப்தியில் சாமானிய மக்கள்!!
சென்னையில் அதிரடியாக உயரும் சொத்துக்களின் விலை – அதிருப்தியில் சாமானிய மக்கள்!!

தமிழகத்தில் கட்டுமான மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக சென்னை பெருநகரில் சொத்துகளின் மதிப்பு 10 முதல் 20% வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு சாமானிய மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

சொத்துக்களின் விலை:

தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் பரவிய கொரோனா பெரும் தொற்று காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டதால் மற்ற துறைகளை தொடர்ந்து கட்டுமான பணிகள் சார்ந்த துறையும் பெரும் இழப்பை சந்தித்தது. கொரோனா காலகட்டத்தில் கட்டுமான பணிகள் நடைபெற அரசு அனுமதி வழங்கவில்லை.

சிலிண்டர் விலை உயர்வு ஏன்? மக்களவையில் கேள்வி.. மத்திய அமைச்சர் பதில்!!

இதனால் துறையின் கீழ் பணிபுரிந்த ஊழியர்கள் தின கூலிக்கு வேலை செய்யும் கட்டுமான தொழிலாளர்கள் வருமானமின்றி சிரமத்தை எதிர்கொண்டனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தான் கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தொழிலுக்கு தேவையான மணல், ஜல்லி, கம்பி உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை பன் மடங்கு உயர்ந்து விட்டது.

இதன் காரணமாக தலைநகரான சென்னையில் சொத்துகளின் விலை 10 முதல் 20% வரை உயர்ந்துள்ளது. மூலப்பொருட்கள் விலை உயர்ந்தால் வரும் நாட்களில் சொத்துகள் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் இந்த கட்டுமான மூல பொருட்களின் விலை உயர்வதால் விற்கப்படும் வீட்டின் விலையை உயர்த்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால் சாமானிய மக்கள் பொருளாதார பிரச்சனையை சந்திக்கின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!