சென்னை கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை – சட்டமன்ற தேர்தல் எதிரொலி!!
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை காய்கறி வியாபார சங்க கூட்டமைப்பு தலைவர் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல்:
தமிழகத்தில் வருகிற மே மாதத்துடன் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவுக்கு வரவுள்ளது. இதன் காரணமாக வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் மிக முனைப்புடன் நடைபெற்று வருகிறது. மேலும் அனைத்து அரசியல் கட்சிகளும் மிக தீவிரமாக தங்களது தேர்தல் பரப்புரையை செய்து வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களின் நலனுக்கேற்ப அரசு சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது. வெளியூரில் பணிபுரிபவர்கள் வாக்களிக்க தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது தேர்தலை முன்னிட்டு மற்றொரு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 11 வரை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!!
அதன்படி தேர்தலுக்கு ஏதுவாக வருகிற ஏப்ரல் 6ம் தேதி கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை என்று தெரிவித்துள்ளனர். அந்த சந்தையின் மூலம் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் வாக்களிக்க ஏதுவாக தேர்தல் அன்று ஒரு நாள் மட்டும் சந்தைக்கு விடுமுறை என்று காய்கறி வியாபார கூட்டமைப்பு சங்க தலைவர் ஜி.டி.ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.
Hai sar