சென்னை: ஒரே நாளில் ஆபரண தங்கம் ரூ.160 உயர்வு – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!
தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்த நிலையில் இன்று என்றும் இல்லாத அளவுக்கு அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்த அதிரடி விலை உயர்வு நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்போது இன்றைய தங்கத்தின் விலையை பற்றி விரிவாக பார்ப்போம்.
தங்கம் விலை
தமிழகத்தில் தங்கத்தின் மீது முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. ஏனெனில் இதில் முதலீடு செய்வதன் மூலமாக அதிகமான அளவு லாபம் பெற முடிகிறது. அதனால் பொதுமக்கள் தங்கத்தை வாங்க அதிக ஆர்வம் கொள்கின்றனர். அத்துடன் வெளிநாட்டினரும் தங்கத்தின் மீது அதிக முதலீடுகளை செலுத்தி வருகின்றனர். அதன் காரணமாக தங்கத்தின் மதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் நிதி நெருக்கடியை சமாளிக்க தங்க நகைகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
Exams Daily Mobile App Download
அந்த சமயத்தில் சேமித்து வைத்த நகைகளை அடமானம் வைத்து குறைந்த வட்டியில் கடன் பெற முடிகிறது. அதனால் தற்போது பெரும்பாலானோர் தங்க நகைகளை சேமிக்கத் தொடங்கியுள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து கொண்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 16ம் தேதி அன்று தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.38,040க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதே போல் தங்கத்தின் விலை நேற்று மேலும் ரூ.20 அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது.
பொதுத்துறை பணியாளர்களுக்கு அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை? அரசு விளக்கம்!
அதாவது சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.38,200க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்படி தங்கத்தின் விலை 2 நாட்களில் ரூ. 280 உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களை வருத்தம் அடைய செய்கிறது. இதே போல் வெள்ளியின் விலை கிராம் 30 காசுகள் உயர்ந்து ரூ.66.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 66,300க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தங்கத்தின் விலை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.