சென்னை: ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.40 உயர்வு – இன்றைய விலை நிலவரம்!
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 21) காலை முதல் மீண்டும் துவங்கியுள்ள தங்க நகை விற்பனை, கடந்த ஒரு நாளில் சவரனுக்கு ரூ.40 வரை அதிகரித்து தற்போது விற்பனை செய்யப்பட்டு வருவது வாடிக்கையாளர்களை சற்று அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
விலை உயர்வு
இந்தியாவில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலையானது தினசரி உயர்வை கண்டு வரும் வகையில், தங்கத்தின் விலையும் ஒரு பக்கம் ஏறிக்கொண்டே இருக்கிறது. பொதுவாக பணத்தை சேமிப்பதில் உகந்த முதலீடாக தங்கம் எப்போதும் காணப்பட்டு வருகிறது. ஆனால் திருவிழா நாட்கள், சுபமுகூர்த்த நாட்களில் தங்கம் வாங்குபவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இன்றும், நாளையும் கடைகள் அடைப்பு – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
அந்த வகையில் இன்று தங்கம் வாங்கலாம் என்று கணித்திருக்கும் பலருக்கும் அதன் விலை ஏற்றம் சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வார துவக்கத்தில் சற்று விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வந்த தங்க ஆபரணங்களின் விலை, இன்று (ஆகஸ்ட் 21) மீண்டுமாக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 20) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.4465 க்கு விற்பனை செய்யப்பட்டது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, பழைய ஓய்வூதிய திட்டம் – ஜாக்டோ ஜியோ மனு!
அதே நேரத்தில் 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 8 ரூபாய் அதிகரித்து ரூ. 38,632 ஆக விற்பனையானது. ஆனால் இன்று துவங்கிய தங்க விற்பனை மார்க்கெட்டில் அதன் விலை கிராமுக்கு ரூ.40 வரை அதிகரித்து தடாலடியாக உயர்ந்துள்ளது. அதன் படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,465 மாகவும் ஒரு சவரன் நகை ரூ.35,720 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தவிர ஒரு கிராம் வெள்ளி ரூ. 66.60 என விற்பனையாகிறது.