சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி சரிவு – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று பல நாட்களுக்கு பிறகு அதிரடியாக குறைந்துள்ளது. தொடர்ந்து அதிகரித்த தங்கத்தின் விலை இன்று எதிர்பாராமல் குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மற்றும் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நேரத்தை பயன்படுத்தி நகைகள் வாங்க முற்பட்டு வருகின்றனர்.
தங்கம் விலை:
இந்தியாவில் தங்க விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வுக்கு கொரோனா வைரஸ் தொற்று, அதனால் விதிக்கப்பட்ட ஊரடங்கு, பணவீக்கம், பங்கு சந்தை சரிவு, ஜிஎஸ்டி வரி உயர்வு, இறக்குமதி வரி உயர்வு போன்றவை காரணங்களாக கூறப்படுகிறது. மேலும் அதிக அளவில் மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதாலும் விலை உயர்ந்து வருகிறது என்கின்றனர். அதனை தொடர்ந்து டாலரின் மதிப்பு அதிகரிப்பது தங்கத்தின் விலை ஏற்றத்துக்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. இன்னும் வரும் நாட்களில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3000 அமெரிக்க டாலரை தொடும் என்று பேங்க் ஆஃப் அமெரிக்கா நிறுவனம் கூறுகிறது.
கோபி & ராதிகா பற்றி அறிந்து தற்கொலை செய்யும் பாக்கியா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
அதற்கேற்றவாறு தான் தற்போது தங்கத்தின் விலையும் இருந்து வருகிறது. அதவாது ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.856 உயர்ந்து ரூ.38,280 -க்கு விற்பனை செய்யப்பட்டது. மறுநாள் ரூ.38,336 ரூபாயாக உயர்ந்தது. இதனால் சாமானிய மக்கள் நகைகள் வாங்குவதில் பொருளாதார ரீதியாக பல்வேறு சிக்கல்களை சந்தித்தனர். நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.56 உயர்ந்து, சவரனுக்கு ரூ.38,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல ஒரு கிராம் ரூ.4,805-க்கும் விற்பனையானது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் இன்று நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்துள்ளது. இதனையடுத்து, ஒரு சவரன் ரூ.37,920 ஒரு கிராம் தங்கம் விலை 65 குறைந்து ரூ.4,740-க்கும் விற்பனையாகி வருகிறது. அதே போல வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. தற்போது சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ரூ. 2 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.62.50 -க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.62,500-க்கும் விற்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்தின் முதல் வாரத்திலேயே தங்கம் விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.