சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு – இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நகை வாங்க முயற்சிப்பவர்களுக்கு தங்கத்தின் விலை உயர்வு அதிருப்தி அடைந்துள்ளனர்.
தங்கம் விலை:
கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கு முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கொரோனா பரவல் குறைந்து நாடு இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியதும் தங்கம் விலை குறையும் அப்போது நகை வாங்கி கொள்ளலாம் என்று நகை பிரியர்கள் காத்திருந்தனர். தற்போது நாட்டில் கொரோனா பரவல் குறைந்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு பல மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் தங்கத்தின் விலையானது குறையவில்லை. திருவிழா நாட்கள், பண்டிகைகள் சுப முகூர்த்த நாட்களில் தங்கம் வாங்குபவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
தற்போது 2022ம் ஆண்டு தொடங்கியுள்ளதை அடுத்து தொடந்து தங்கத்தின் விலை குறைந்தபாடில்லை. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு தங்க நகைகள் வாங்குவது என்பது பெரும் சவாலாக உள்ளது. ஜனவரி மாதத்தில் புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் காரணமாக தங்கம் விலை அதிகரித்தது. அதன் தொடர்ச்சியாக பிப்ரவரி மாத தொடக்கத்திலும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. தினமும் தங்கம் விலையானது காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளில் தங்கம் விலை மாறுபடுகிறது.
BB Ultimate Promo 4 | ஹவுஸ்மெட்ஸ் நடவடிக்கைகளுக்கு மதிப்பெண் கொடுத்த ஷாரிக்! வெடிக்குமா சண்டை!
அதன்படி இன்றய மாலை நேர நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,256க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.4,532 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் வெள்ளி விலை குறைந்துள்ளது இன்று வெள்ளி கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ரூ.65.30க்கு விற்கப்படுகிறது.