சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் இன்றைய விற்பனையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 வரை உயர்வடைந்துள்ளது. இந்த அதிரடியான விலை உயர்வு நகைப்பிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
விலை உயர்வு
சமீப காலமாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வடைந்து வருகிறது. அதாவது, உலக சந்தையில் ஏற்படும் பல்வேறு மாற்றங்கள் மற்றும் ரஷ்யா, உக்ரைன் போருக்கு மத்தியில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து ஏற்ற, இறக்கம் கண்டு வருகிறது. இதனால் திருமணம் உள்ளிட்ட சுபமுகூர்த்த காரியங்களுக்கு நகை வாங்குபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து ஏற்ற, இறக்கம் கண்டு வரும் தங்கத்தின் விலையானது இன்றும் சவரனுக்கு ரூ.160 வரை உயர்வடைந்துள்ளது. அதாவது சென்னையில் இன்று (ஜூன் 23) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 வரை அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஒரு சவரன் நகை ரூ.38,120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல சென்னையில் ஆபரணத் தங்கங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 வரை உயர்வடைந்து ஒரு கிராமுக்கு ரூ.4,765 என விற்பனையாகிறது.
தமிழகத்தின் இம்மாவட்டத்தில் (நாளை) ஜூன் 24ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
அதே நேரத்தில் சென்னையில் இன்று (ஜூன் 23) சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலையில் ஒரு கிராம் ரூ.66க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நேற்றைய விற்பனையில் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,960 ரூபாய்க்கு விற்பனையானது. அதே போல ஒரு கிராம் தங்கம் 20 ரூபாய் குறைந்து 4,745 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதற்கிடையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றைய விற்பனையில் சவரனுக்கு ரூ.160 வரை உயர்வடைந்து மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.