சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே உயர்ந்து கொண்டே செல்கிறது. ஏற்கனவே ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.37,720 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில் தற்போது மேலும் 120 ரூபாய் அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலை
கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருந்து வருகிறது. திடீரென தங்கத்தின் விலை பல மடங்கு உயர்வதும், திடீரென இறங்குவதுமாய் இருக்கிறது. தங்கத்தின் விலை பல ஆயிரங்கள் அதிகரித்தாலும் கூட தாய்மார்கள் நகையில் முதலீடு செய்வதை தான் விரும்புகின்றனர். தங்கத்தின் முதலீடு செய்வது தான் எதிர்காலத்திற்கு பாதுகாப்பான திட்டமாகவும், லாபம் தரக்கூடிய திட்டமாகவும் எண்ணுகின்றனர். இந்த மாத தொடக்கத்தில் சில நாட்கள் தங்கத்தின் விலை குறைந்தது. தாய்மார்கள் அனைவரும் மகிழ்ச்சியுற்ற நிலையில் மீண்டும் தங்கத்தின் விலை உயர தொடங்கிவிட்டது.
Exams Daily Mobile App Download
ரஷ்யா மற்றும் உக்ரைன் போராலும் கடுமையான பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவும் தங்கத்தின் விலை பல ஆயிரங்கள் அதிகரித்தபடி இருக்கிறது. நேற்று சென்னையில் மட்டுமே ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.25 குறைந்து ரூ.4,715-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், சவரனுக்கு ரூ.200 குறைந்து, ஆபரண தங்கத்தின் விலை ரூ.37,720-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் ரூ.200 விலை குறைந்ததால் தாய்மார்கள் மகிழ்ச்சியுற்றனர்.
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – 2 கட்டங்களாக கணினி வழியில் தேர்வு! முக்கிய அறிவிப்பு வெளியீடு!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.38,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.15 அதிகரித்து ரூ.4,755 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை இன்று ரூ.66 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.66,000 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரே நாளில் ஆபரண தங்கத்தின் விலை 120 ரூபாய் உயர்ந்துள்ளதால் நகை பிரியர்கள் சோகமடைந்துள்ளனர்.