சென்னை: நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை!
தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக ரூபாய் 200 குறைக்கப் பட்டு சவரனுக்கு ரூபாய் 38,869 என்று விற்பனை ஆகி வருகிறது. இதனால் நகைப்பிரியர்கள் மிகவும் ஆர்வத்துடன் நகைகளை வாங்கி மகிழ்ந்து வருகின்றனர்.
ஆபரணத் தங்கத்தின் விலை:
உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா தொற்று புரட்டி போட்டது. மேலும் பல வார்த்தகங்களும் செயலில் இல்லாமல் போனது. இதில் மிகவும் முக்கியமானதாக ஆபரண தங்கம் உள்ளது. சாதாரண நாட்களில் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்காக நகைப் பிரியர்கள் நிறைய பேர் நகை வாங்கி மகிழ்வர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்கத்தின் விலை அதிகரித்தது. இதனால் நகை பிரியர்கள் தங்க நகைகளை வாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து தற்போது வரை உக்ரைன் நாடு போரில் சிக்கி தவித்து வருகிறது. அதனால் தற்போது வரை தங்கத்தின் விலை உயர்ந்த வண்ணமே உள்ளது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் வெளிநாடுகளில் தங்கம் மற்றும் மற்ற ஆபரணங்கள் ஒரு வகையான முதலீடு மட்டும் தான். ஆனால் இந்தியாவில் மட்டுமே இதை அணிகலனாக அணிந்து மகிழ்ந்து வருகின்றனர். முக்கியமாக தங்கத்தின் மீது ஆர்வம் கொண்ட மாநிலத்தில் நமது மாநிலமான தமிழ்நாடு மட்டுமே தற்போது வரை முன்னிலையில் இருந்து வருகிறது. சமீப காலமாக ஆபரண தங்கத்தின் விலை மிகவும் எகிறி கொண்டே வருகிறது.
இந்தியாவில் 6 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஏப்ரல் 28 முதல் தடுப்பூசி – பிரதமர் அறிவிப்பு!
இந்த நிலையில் தற்போது ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.38,896க்கு விற்பனை ஆகி வருகிறது. மேலும் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.4,862க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.50 காசு குறைந்து, ரூ.69.80-க்கு விற்பனை ஆகி வருகிறது என்றும் தெரிவித்து உள்ளனர்.