சென்னை: ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.392 உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. நேற்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 39,576 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில் தற்போது மேலும் 392 ரூபாய் அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலை:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே செல்கிறது. தங்கத்தின் விலை எவ்வளவு அதிகரித்தாலும் தாய்மார்கள் மற்றும் நகைப் பிரியர்கள் நகை வாங்குவதில் தான் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். மேலும், இவர்கள் வாங்கும் சம்பளத்தை தங்கத்தில் தான் முதலீடு செய்கின்றனர். தங்கத்தில் முதலீடு செய்வதை தான் எதிர்காலத்திற்கும் பாதுகாப்பான திட்டமாக எண்ணுகின்றனர். இந்த கொரோனா காலகட்டத்திற்கு பிறகு தான் தங்கத்தின் விலை அதிக அளவில் அதிகரிக்கத் துவங்கியது.
மீண்டும் பள்ளி மாணவர்களிடையே பரவும் கொரோனா தொற்று – பெற்றோர்கள் அச்சம்!
மேலும், ரஷ்யா மற்றும் உக்ரைன் போரால் அந்நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி அனைத்தும் பாதிப்படைந்து பங்கு சந்தை நிலவரம் மிகவும் சரிவடைந்தது. இதனால் தங்கத்தின் விலையும் தொடர்ந்து சில நாட்களாக உயர்ந்து கொண்டே செல்கிறது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.39,576 க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,956 க்கு விற்பனையானது.
ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு – மாதம் ரூ.8000/- உதவித்தொகை
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.39,896-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,996க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை நேற்று ரூ.72.90 க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.74.20 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 392 ரூபாய் உயர்ந்துள்ளதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.