சென்னை: 6 முதல் 9ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வு அட்டவணை!
சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு முழு ஆண்டுத் தேர்வு எப்போது என்பது குறித்து அறிவிப்பை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ளது.
முழு ஆண்டு தேர்வு
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல மாதங்கள் பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் பாடங்கள் முடிப்பதில் தாமதம் ஏற்பட்டது . இதனை அடுத்து தேர்வுகளும் நடத்தப்படாமல் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா குறைந்த நிலையில் பள்ளிகளும் கல்லூரிகளும் திறக்கப்பட்டு சனிக்கிழமைகளில் கூட பள்ளிகள் நடத்தப்படுகின்றன. அதை தொடர்ந்து இந்த வருடம் மாணவர்களுக்கு கண்டிப்பான முறையில் தேர்வுகள் நடத்தப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.
அரசு ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படி (DR) உயர்வு – ஜனவரி முதல் அமல்!
இந்த நிலையில் ஏற்கனவே 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுஅறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல்,மே மாதங்களில் தேர்வுகள் நடைபெறும் என அறிவித்திருந்தது. எல்லா வருடமும் ஏப்ரல் மாத கடைசியிலே எல்லா வகுப்பு பிரிவினருக்கும் தேர்வுகள் முடிவடைந்திருக்கும். பள்ளிகளை திறக்க தாமதமான காரணத்தால் தேர்வுகள் மே மாதம் வரை நடத்தப்பட இருக்கிறது.
மே 1 முதல் அரசு ஊழியர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – இதற்காக தான்?
1 முதல் 5ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதற்கு பரிசீலனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் உள்ள பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கும் என்றும் இந்த தேர்வுகள் மே 12ஆம் தேதி முடியும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.