ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!
தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் வசதிகள் இல்லை என்று கூறி மருத்துவர்கள் பணியாற்றாமல் மறுக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்களை, அரசாங்கம் நியமித்து வருகிறது. அந்த வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியமர்த்தப்படும் மருத்துவர்கள் அங்குள்ள வசதியற்ற சூழலை காட்டி பணியை மறுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வசதிகள் இல்லை என கூறி மருத்துவர்கள் பணியை மறுக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அனைத்து வங்கி தேர்வுக்கான Best Online Classes – குறைந்த பயிற்சி கட்டணத்தில்! உடனே Join செய்யுங்கள்!
அதாவது, மருத்துவத்துறையில் மேற்படிப்பு முடித்தவர்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் வசதிகள் இல்லை என கூறி பணியை மறுத்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு அரசாங்கம் அதிகளவு தொகையை செலவு செய்கிறது. இதற்கு மாற்றாக, மருத்துவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.