தமிழகத்தில் அரசு பணியாளர்கள் பதவி நீக்கம் குறித்த உத்தரவு? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் வார்டு வரையறையில் போது ஒரு பகுதி மக்களுக்கு மட்டும் முறையான பணிகளை மேற்கொள்ளாத அரசு ஊழியர்கள் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் அதிரடியான கேள்வியை எழுப்பியுள்ளது.
பதவி நீக்கம்:
பொதுமக்களுக்கு அரசு தரப்பில் இருந்து பெற வேண்டிய சேவைகள் அல்லது வழங்கப்பட வேண்டிய நலத்திட்டங்கள் அல்லது ஏதேனும் விவரங்கள் போன்றவற்றை பெறுவதற்கு மக்கள் நீதிமன்றங்களை நாடுகின்றனர். இதனால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் மற்றும் தகவல்கள் அனைத்தும் எளிதாக கிடைக்கும் என்ற நம்பிகள் எழுந்துள்ளது. அதேபோல், தற்போது திருநெல்வேலியை சேர்ந்த சிதம்பராபுரம் கிராம ஊராட்சியில் வார்டு மறுவரையறை செய்த போது, சிதம்பராபுரத்தில் உள்ள 84 வீடுகளை பிரித்து பழவூர் மற்றும் ஆவாரைகுளம் பஞ்சாயத்தில் சேர்த்தனர்.
தமிழக பள்ளிகளுக்கு வரும் ஏப்ரல் 11ம் தேதி விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
இந்த பகுதியை சேர்ந்த மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவும், சொத்து வரி வாங்கவும், அதற்கான ரசீதுகளை வழங்க மறுக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த ஸ்டாலின் மற்றும் ஜெனிட்டா இருவரும் அடிப்படை வசதிகள் செய்து தரவும், சொத்து வரியை வசூலித்து ரசீதுகளை வழங்கவும் உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். முதல் முறையாக வழக்கு விசாரணைக்கு வந்த போது பழவூர் மற்றும் ஆவாரைக்குளம் பஞ்சாயத்து தலைவர்களும், மாவட்ட திட்ட அலுவரும் ஆஜராகினர். அவர்களிடம் கடந்த முறை வழக்கு விசாணையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய போதும் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை ன்று கேள்வி கேட்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவின் படி நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து தலைவர்களை பதவி நீக்கம் செய்ய உத்தரவிடலாமா? எனவும் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கு வரும் ஏப்ரில் 13ம் தேதி அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் பழவூர், ஆவாரைகுளம் பஞ்சாயத்துகளை சேர்ந்த குடியிருப்புகளுக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்து தருவதாகவும், முறையாக சொத்து வரிகளை வசூலிப்பதாகவும் பஞ்சாயத்து தலைவர்கள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.