TNPSC குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பணிக்கான தோ்வு – உயா் நீதிமன்றம் தள்ளுபடி!
தமிழகத்தில் அண்மையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பணியில் உள்ள காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. மேலும் இந்த பணிக்கான கல்வித் தகுதி குறித்து TNPSC க்கு எதிராகத் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சமூக பாதுகாப்புத் துறையில் காலியாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்பு அடிப்படையில் மொத்தம் 16 பணியிடங்கள் நிரப்பிட உள்ளன. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியில் காலியிடங்களின் எண்ணிக்கை 16 ஆகும். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Sociology or Social Work or Psychology or Child Development or Criminology படிப்பு முடித்திருக்க வேண்டும்.
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து? வலுக்கும் கோரிக்கை!
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://www.tnpsc.gov.in அல்லது http://www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 30 ஆகும். இதன்படி, விண்ணப்ப பதிவிற்கான கால அவகாசம் முடிந்து விட்டது. இந்நிலையில் சமூகவியல் பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்ற ரங்கநாதன் என்பவா், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணிக்கு இணையவழியில் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய முடியவில்லை. ஆகவே, மேற்குறிப்பிட்ட பணிக்கான தோ்வில் எனது விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
Exams Daily Mobile App Download
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அவர்கள் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவின் பேரில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணிக்கு, சமூகவியலில் பட்டம் பெற்றிருப்பது கல்வித் தகுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப் பணிக்கான விண்ணப்பதாரா்கள் 10ம் வகுப்பு தோ்ச்சி, பிளஸ் 2 தோ்ச்சி, 3 ஆண்டுகள் பட்டப் படிப்பு என்ற வரிசையில் மேற்குறிப்பிட்ட கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும் என அரசுப் பணியாளா் தோ்வாணைய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்புப்படி தான் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், மனுதாரா் சம்பந்தப்பட்ட பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடிக்கவில்லை. ஆகவே, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பணிக்கு எஸ்.எம்.சுப்பிரமணியம் விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்ய முடியாது எனக் கூறி மனுவைத் நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார்.