பல்கலைக்கழக இடஒதுக்கீட்டில் பணிக்காக மதமாற்றம் – ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!

1
பல்கலைக்கழக இடஒதுக்கீட்டில் பணிக்காக மதமாற்றம் - ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!
பல்கலைக்கழக இடஒதுக்கீட்டில் பணிக்காக மதமாற்றம் - ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!
பல்கலைக்கழக இடஒதுக்கீட்டில் பணிக்காக மதமாற்றம் – ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!

பல்கலைக்கழகங்களில் பணிபுரிய இடஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமனம் பெறுவதற்கு மதம் மாறுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களை பணி நீக்கம் செய்ய பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இடஒதுக்கீடு:

பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் உட்பட அனைத்து பணியாளர்களும் தகுதி மற்றும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள். இதன் அடிப்படையில் பலர் தங்களது பணி நியமனத்துக்காக மதம் மாறுவதும், போலியான சான்றிதழ்களை கொடுத்தும் மோசடியில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சைக்கு மேலும் 2 புதிய மருந்துகள் – இந்திய மருந்து கட்டுப்பாட்டு துறை அனுமதி!!

அந்த வகையில் கவுதமன் என்பவர் பல்கலைக்கழக பணி நியமனத்துக்காக மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், பணி நியமனத்துக்காக ஒருவர் மதம் மாறுவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதாவது மோசடி, மதம் மாறல், போலியான சான்றுகளை அளித்து பணியில் சேர்ந்தது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவது தெரிய வந்தால் அவர்களை பணி நீக்கம் செய்யலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தவிர கவுதமன் என்பவர் மீதான வழக்கு விசாரணையில் அவரது பணி நியமனத்தையும், பதவி உயர்வையும் ரத்து செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. இதற்க்கு தான் மதமாற்ற தடை சட்டம் அவசியம் வேண்டும். நாளை நம் பிள்ளைகளின் உழைப்பு பறிபோக வாய்ப்புள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!