தமிழக கோவில்களில் முதல் மரியாதை செய்ய தடை – சென்னை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!!
தமிழகத்தில் உள்ள கோவில்களில், எந்தவொரு தனிநபர்களுக்கும் முதல் மரியாதை செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அதே போல தலைப்பாகை அணிவிப்பது போன்ற செயல்பாடுகளும் இருக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவில்களில் மரியாதை
தமிழகத்தில் உள்ள கோவில்களில், தனிநபர்களுக்கு முதல் மரியாதை வழங்குவது மற்றும் தலைப்பாகை அணிவிப்பது போன்ற செயல்களுக்கு தடை விதித்து இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் உள்ள கோவில்களில், இந்த ஆண்டு தைத்திருவிழா கோலாகலாமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த திருவிழாவில் எந்தவொரு நபருக்கும் முதல் மரியாதை செய்வது கோவில் நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.30,000/-
Follow our Instagram for more Latest Updates
இருப்பினும், அந்த பகுதியை சேர்ந்த சசி பாண்டித்துரை என்ற நபர் தனக்கு முதல் மரியாதை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளார். இதனை எதிர்த்து பாலச்சந்திரன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோவில்களில் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும். எந்தவொரு நபரின் சமூக அந்தஸ்தை வைத்து அவருக்கு முதல் மரியாதை செய்வது, குடை பிடிப்பது, தலைப்பாகை அணிவிப்பது போன்ற செயல்களை செய்ய கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.