மே 1 முதல் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கும் – தலைமை பதிவாளர் தகவல்!!

0
மே 1 முதல் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கும் - தலைமை பதிவாளர் தகவல்!!
மே 1 முதல் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கும் - தலைமை பதிவாளர் தகவல்!!
மே 1 முதல் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கும் – தலைமை பதிவாளர் தகவல்!!

தமிழகத்தில் மே 1 முதல் சென்னை உயர் நீதிமன்றம் கொரோனா பரவல் காரணமாக 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கும் என தலைமை பதிவாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம்:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து இரவு, வார இறுதி ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அலுவலக வேலை நேரத்தையும் குறைத்துள்ளது. தகவல் தொழில்நுட்ப துறைகளிலும் 50% ஊழியர்களுடன் பணி புரிய அனுமதி அளித்ததுள்ளது. இது போன்ற பல நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 30க்குள் ‘இது’ கட்டாயம் – பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!!

இதனை தொடர்ந்து கொரோனா தீவிரம் காரணமாக உயர்நீதிமன்ற வளாகத்தில் 50 சதவீத ஊழியர்கள் மட்டும் பணிபுரிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவித்துள்ளார். கடந்த வருடம் கொரோனா காலத்தில் உயர்நீதிமன்றம் அவசர வழக்குகளை ஆன்லைன் மூலம் மேற்கொண்டது. குறிப்பிட்ட வழக்குகளை மட்டும் விசாரித்தது. பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வழக்குகள் விசாரிக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

தற்போது உள்ள சூழலில் கொரோனா பரவலை தடுக்க உயர்நீதிமன்ற கிளை 50% ஊழியர்களுடன் இயங்கும் என தலைமை பதிவாளர் அறிவித்துள்ளார். மறுஉத்தரவு வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்றும் நீதிமன்ற பணியாளர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் ஒவ்வொரு பிரிவுக்கும் 2 நாள் பணி தரப்படும் என்று தலைமை பதிவாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!