ஆட்டோ, டாக்சிகளில் கூடுதல் கட்டணம் வசூல் – உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!
தமிழகத்தில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு தளர்வில் ஆட்டோ, டாக்சி உள்ளிட்ட வாகனங்கள் இயங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களில் பயணிக்கும் பயணிகளிடம் அதிகளவு கட்டணம் வசூலிக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கூடுதல் கட்டணம்
கொரோனா 2 ஆம் அலை தடுப்பு கட்டுப்பாடுகளாக விதிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கில் இருந்து தற்பொழுது அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளில், ஆட்டோ, டாக்சி உள்ளிட்ட வாகனங்களை இயக்க அரசு அனுமதி கொடுத்துள்ளது. இருப்பினும் இந்த வாகனங்களில் கொரோனா தடுப்பு நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆட்டோ, டாக்சிகளில் பயணிகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
Airtel வாடிக்கையாளர்களுக்கு ஷாக் அறிவிப்பு – ரூ.49 ரீசார்ஜ் திட்டம் நிறுத்தம்!
அதாவது மதுரை மாவட்டத்தில் ஆட்டோ மற்றும் டாக்சிகளுக்கான விதிகளை முறையாக பின்பற்ற உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாகிர் உசேன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை தொடர்ந்து இந்த வழக்கு இன்று (ஜூலை 29) வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் மதுரை மாவட்டத்தில் இயங்கி வரும் ஆட்டோ, டாக்சி வாகனங்களில் பயணம் செய்யும் மக்களிடம் அதிக அளவு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் இவ்வாகனங்களில் உள்ள மீட்டரை சட்டவிரோதமாக மாற்றியமைப்பது குற்றமாகும். இந்த மீட்டர் முறையை உறுதி செய்த பிறகு வாகனங்களுக்கான சான்றிதழ் வழங்க வேண்டும். அதே நேரத்தில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை மதுரை மாவட்ட RDO க்கள் உறுதிப்படுத்த வேண்டும். மேலும் ஷேர் ஆட்டோக்கள், மினி பேருந்துகளில் அதிகளவு பயணிகளை ஏற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.