தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்கள் வீட்டிலேயே இருங்கள் – சென்னை உயர் நீதிமன்றம்!

0
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்கள் வீட்டிலேயே இருங்கள் - சென்னை உயர் நீதிமன்றம்!
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்கள் வீட்டிலேயே இருங்கள் - சென்னை உயர் நீதிமன்றம்!
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்கள் வீட்டிலேயே இருங்கள் – சென்னை உயர் நீதிமன்றம்!

ஆசிரியர்கள், மாணவர்களின் நலன் கருதி கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்த விருப்பம் இல்லாத ஆசிரியர்கள் வீட்டிலேயே இருப்பது தான் சிறந்தது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகள் 18 வயது மேற்பட்டோருக்கு 2 டோஸ்களாக செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசிகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்றுக்கு எதிராக செயல்படுகிறது. இதன் பலனாக வைரஸ் பரவல் தமிழகத்தில் குறைந்துள்ளது. தற்போது நாள்தோறும் 1000க்கு கீழ் புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பதிவாகிறது.

மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு? நவ.24ம் தேதியன்று அரசு ஆலோசனை!

இந்த நிலையில் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்க அரசு முடிவு செய்தது. நோய் தொற்று முழுமையாக குறையாத இந்த நேரத்தில் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அரசின் நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஆசிரியர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசியை செலுத்த வேண்டும். அதன் பிறகே பள்ளிக்கு வர வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து கல்வி வள மேம்பாடு அறக்கட்டளை அமைப்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது. கல்வி நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசியை கட்டாயப்படுத்தக் கூடாது என்று மனுவில் தெரிவித்தனர்.

ஆதார் எண்ணை பயன்படுத்தி BHIM மூலம் பணம் அனுப்பலாம் – எளிய வழிமுறைகள் இதோ!

இந்த வழக்கு விசாரணையில், ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல விரும்பினால் மாணவர்களின் நலன் கருதி கட்டாயம் கொரோனா தடுப்பூசியை செலுத்தி இருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தி கொள்ள விருப்பம் இல்லாத ஆசிரியர்கள் பள்ளியில் உள்ள மாணவர்கள் மற்றும் பிற ஊழியர்களின் நலன் கருதி வீட்டில் இருப்பது சிறந்தது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி மாணவர்களின் நலன் கருதியே தமிழக அரசு இவ்வாறு உத்தரவிட்டது என்று கூறி நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!