தமிழக அரசு அறநிலையத்துறை நிலங்கள் கோவில்களுக்கு மட்டுமே – உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

0
தமிழக அரசு அறநிலையத்துறை நிலங்கள் கோவில்களுக்கு மட்டுமே - உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
தமிழக அரசு அறநிலையத்துறை நிலங்கள் கோவில்களுக்கு மட்டுமே - உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
தமிழக அரசு அறநிலையத்துறை நிலங்கள் கோவில்களுக்கு மட்டுமே – உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

தமிழகத்தில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில் நிலங்களை கோயில்களுக்கு வருவாய் வரும் வகையில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு அறநிலையத்துறை:

தமிழகத்தில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயிலின் நிலத்தை அதன் வருமானத்திற்கு வழிசெய்வதை தவிர பிற நோக்கத்திற்காக பயன்படுத்தவோ, வேறு யாருக்கு வழங்கவோ முடியாது என அறநிலையத்துறை சட்டம் மற்றும் வருவாய் துறை நிலை விதிகள் உள்ளது. ஆனால் பல இடங்களில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வையப்பமலை சுப்பிரமணிசாமி கோயில் புறம்போக்கு நிலத்தை, வகைமாற்றம் செய்து 81 பேருக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கோயில் சார்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பாஜக உறுப்பினர் பொறுப்பு ராஜினாமா – மணிப்பூர் ஆளுநர் இல கணேசன் கையெழுத்து!

கோயில் சார்பாக அளிக்கப்பட்டுள்ள மனுவில், அறநிலையத்துறையின் கீழ் உள்ள நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகில் உள்ள வையப்பமலை சுப்ரமணியசாமி கோயிலுக்கு சொந்தமான 10.64 ஹெக்டேர் நிலம் புறம்போக்காக உள்ளது. இந்த இடத்தை வருவாய்த் துறையினர் கிராம நத்தமாக மாற்றி 81 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா போட்டு கொடுத்துள்ளனர். மேலும், கோயில் விழா மற்றும் சடங்குகளுக்கு மட்டுமே தற்காலிகமாக கோயில் நிலத்தை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் அவர்கள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வட்டாச்சியர் பட்டா வழங்கப்பட்ட இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்பதை நிரூபிக்க எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை. அரசு நிலம் தான் பட்டா போட்டுள்ளது என்று கூறினார். பின்னர், கோயிலின் நிலத்தை அதன் வருமானத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு யாருக்கும் வழங்க முடியாது. இது தொடர்பாக அறநிலையத்துறை சட்டம் மற்றும் வருவாய் துறை நிலை விதிகள் உள்ளதால், அறநிலையத்துறை ஆணையரின் தடையில்லா சான்று இல்லாமல் பட்டா மாற்றம் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!