சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த வாரம் முதல் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வு நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்க விலை:
நாடு முழுவதும் பரவ தொடங்கிய கொரோனா பெருந்தொற்று காரணத்தால் கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் மூடப்பட்டது. தொழில்கள் முடங்கியதால் முதலீட்டாளர்கள் கடும் பொருளாதார சரிவை சந்தித்தனர். இந்த நேரத்தில் ஏராளமானோர் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கினர். இதனால் தங்க விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இது நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அரசின் ஏர் இந்தியா நிறுவனத்தை கைப்பற்றிய டாடா – அதிகாரபூர்வ அறிவிப்பு!
ஒரு சவரன் தங்கம் விலை 35,000 க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சாமானியர்கள் நகை வாங்க முடியாத நிலையில் உள்ளனர். சுப முகூர்த்த தினங்களிலும், பண்டிகை காலங்களிலும் நகை விலை வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுகிறது. சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை 192 உயர்ந்து ஒரு சவரன் 35,288-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.4,411-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சபரிமலை செல்பவர்களின் கவனத்திற்கு – மண்டல மகர விளக்கு பூஜை தேதி அறிவிப்பு!
அதனை தொடர்ந்து இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 35,304 விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 4,413 விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி ஒரு கிராமுக்கு 60 காசுஅதிகரித்து ரூ.65.20 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 20 காசுகள் குறைந்து ரூ.65.20கும் விற்பனை செய்யப்படுகிறது.