சென்னை: அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!

0
சென்னை: அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை - அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!
சென்னை: அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை - அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!
சென்னை: அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!

தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து கொண்டுதான் இருக்கும். இந்நிலையில் சில தினங்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அந்த வகையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை திடீரென அதிகரித்து உள்ளது.

தங்க விலை உயர்வு:

தமிழகத்தில் கொரோனா காரணமாக பொதுமக்கள் அதிகம் பொருளாதார நெருக்கடியை சந்தித்தனர். இதனால் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஆபரண தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். தங்கத்தில் முதலீடு செய்தால் பெண் குழந்தைகள் மேற்படிப்பு, திருமணம் ஆகிய தேவைகளுக்கு இந்த முதலீடுகள் மிகவும் உதவியாக இருக்கும். மேலும் தங்கத்தில் முதலீடு செய்தால் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை மதிப்பு உயர்த்து கொண்டுதான் இருக்கும். மேலும் இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட நம் தமிழகத்தில் தான் நகைப் பிரியர்கள் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

சுபமுகூர்த்த நாள், அட்சய திருத்தி போன்ற நாட்களில் தங்கத்தின் விலை உச்சத்தை தொடும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த வருடம் அட்சய திருதியை நாளில் தங்கத்தின் விலை குறைவாக இருந்தது. இதனால் நகைக் கடைகளில் அதிகாலை முதலே விற்பனை சூடு பிடிக்கத் தொடங்கியது. மேலும் பொதுமக்கள் தங்க நகைகளை வாங்கி குவித்தனர். இதை தொடர்ந்து தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து முதலீட்டு உலகம் அரண்டு போய் உள்ளது. ஆனாலும், கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி அடைந்துள்ளது.

தமிழக அரசுப்பள்ளிகளில் புதிதாக 8,000 ஆசிரியர்கள் நியமனம் – அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

உக்ரைனில் நடந்துவரும் போர், ரஷ்யா மீதான பொருளாதார தடை போன்ற காரணங்களால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. பங்குச்சந்தை சரிவு, பணவீக்கம், பொருளாதார அதிர்வுகளுக்கு இடையே தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாக முதலீட்டாளர்கள் கருதுகிறார்கள். இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, சவரன் ரூ.38,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,765-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலையில் ஒரு கிராம் ரூ.66-க்கு விற்பனை ஆகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!