சென்னை: ஒரே நாளில் ராக்கெட் வேகத்தில் எகிறிய தங்க விலை – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!
தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று என்றும் இல்லாத அளவுக்கு அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்த அதிரடி விலை உயர்வு நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்போது இன்றைய தங்கத்தின் விலையை பற்றி விரிவாக பார்ப்போம்.
தங்கம் விலை:
தமிழகத்தில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் மாறிக்கொண்டு வருகிறது. அதனால் நகைப்பிரியர்கள் தங்கத்தை எப்போது வாங்குவது என்ற குழப்பத்தில் உள்ளனர். மேலும் தற்போது பெரும்பாலானோர் தங்கத்தை வாங்க ஆர்வம் கொள்கின்றனர். அதனால் தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக விலை உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Exams Daily Mobile App Download
கடந்த 23ம் தேதி அன்று தங்கத்தின் விலை சவரன் ரூ.80 குறைந்து ரூ. 38,120க்கும், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,765க்கும் விற்பனையானது. இதே போல் நேற்றும் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.4,745க்கும் அத்துடன் சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.37,960க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதனால் நகை பிரியர்கள் ஓரளவு மகிழ்ச்சியில் இருந்தனர். இந்த நிலையில் இன்று என்றும் இல்லாத அளவுக்கு சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து சவரனுக்கு ரூ.38,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் – முக்கிய தகவல்!
இதையடுத்து தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ. 4,755க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போல் வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு ரூ.30 காசு குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி இன்று ரூ.65.70க்கும் மற்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.65,700க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இனி வரும் காலங்களில் கொரோனா பாதிப்பு, பணவீக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.