சென்னை: அதிரடியாக குறைந்த தங்க விலை – சந்தோஷத்தில் நகை பிரியர்கள்!
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே செல்கிறது. தற்போது இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.80 அதிரடியாக குறைந்து உள்ளது. இதனால் நகைப் பிரியர்கள் அதிக குஷியில் உள்ளனர்.
தங்கத்தின் விலை:
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. திடீரென தங்கத்தின் விலை பல மடங்கு உயர்வதும், திடீரென இறங்குவதுமாக இருக்கிறது. தங்கத்தின் விலை பல ஆயிரங்கள் அதிகரித்தாலும் கூட தாய்மார்களுக்கு நகையின் மீது உள்ள ஆசை மட்டும் எப்போதும் குறைந்ததில்லை. தங்கத்தின் முதலீடு செய்வது தான் எதிர்காலத்திற்கு பாதுகாப்பானதாக அன்றிலிருந்து இன்று வரை கூறப்படுகிறது.
Exams Daily Mobile App Download
அதுமட்டுமின்றி, தங்கம் மற்றும் இடத்தின் மீது போட கூடிய பணம் எப்போதும் லாபம் தரக்கூடியதாக எண்ணுகின்றனர். ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதனால் தாய்மார்கள் அனைவரும் மகிழ்ச்சி இன்றி இருந்தனர். தங்கத்தின் விலை அதிகரிப்பதன் முக்கிய காரணம் ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் மற்றும் கொரோனா என கூறலாம். இந்த இரண்டின் பாதிப்பு காரணமாக கடுமையான பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்துள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியீடு – அரசு திடீர் உத்தரவு!
அதாவது நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,775 க்கும், சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,200க்கும் விற்கப்பட்டு வந்தது. அதனைத்தொடர்ந்து இன்று சென்னையில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.4,765 க்கும், ஒரு சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.38,120க்கும் விற்பனையாகிறது. அதே போல சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசு குறைந்து ரூ.66.30க்கு விற்பனை ஆகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.