சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 சரிவு – இன்றைய நிலவரம்!
தமிழகத்தில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் ஆபரண தங்கத்தின் விலையானது மீண்டுமாக குறைந்துள்ளது. அந்த வகையில் இன்றைய (செப்டம்பர் 16) விற்பனையில் ஒரு சவரன் நகை ரூ.176 குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விலை சரிவு
பொதுவாக திருமணம் போன்ற சுபமுகூர்த்த நாட்கள், பண்டிகள் காலங்கள் என குறிப்பிட்ட சில நாட்களில் தங்க நகைகளை வாங்குவது மக்கள் வழக்கமாக இருந்தது. இப்போது இந்த வழக்கம் பெருமளவு மாறி இருக்கிறது. ஏனென்றால் சாதாரண காய்கறி, மளிகை பொருட்கள் போன்றவை துவங்கி எந்த பொருட்களை எடுத்தாலும் அதன் விலை வாசி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் தங்கத்தின் விலை பற்றி சொல்லவேண்டியதில்லை.
இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 30,570 பேருக்கு தொற்று! 431 பேர் பலி!
ஏனென்றால் ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையானது மாறிக் கொண்டு வருகிறது. இதனுடன் தங்கம் என்பது அன்றாட வாழ்வில் தவிர்க்கமுடியாத ஒன்றாக இருக்கின்ற சூழலில் பலரும் நகைகளை வாங்கி குவிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக தங்க நகைகளை வாங்கி வைப்பது ஒரு முதலீடாக கருதப்படுகிறது. இந்நிலையில் தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு உரிய நாளாக இன்றைய தினம் அமைந்துள்ளது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவு – அறிவிப்பு வெளியீடு!
ஏனென்றால் இன்றைய (செப்டம்பர் 16) தங்கநகை விற்பனையானது நேற்றைய விலையை விட சரிவை சந்தித்துள்ளது. அந்த வகையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 என குறைந்து, ஒரு சவரன் நகை ரூ.35,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.22 குறைந்து ரூ.4,430க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனுடன் ஒரு கிராம் வெள்ளியின் விலையானது 10 காசுகள் வரை உயர்ந்து ரூ.67.80க்கு விற்பனையாகிறது.