சென்னை: கிடுகிடுவென உயரும் ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் ஷாக்!
சென்னையில் வணிக சந்தையின் நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.35,856-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகைப்பிரியர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
தங்கத்தின் விலை:
உலக அளவில் தங்கம் அதிகம் விற்பனை செய்யப்படும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகித்து வருகிறது. வசதி படைத்தவர்கள் முதல் நடுத்தர வர்கத்தினர் வரை அனைவருக்கும் தங்கத்தின் மீதான மோகம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் கொரோனா தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டன. பெரும்பாலான தொழில்கள் முடங்கியதால் முதலீட்டாளர்கள் கடும் பொருளாதார சரிவை சந்தித்தனர்.
நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு – விரைவில் தேர்வு முடிவுகள்! தேர்வு முகமை அறிவிப்பு!
எனவே ஏராளமானோர் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கினர். இதனால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் சாமானியர்கள் நகை வாங்க முடியாத நிலை நிலவியது. கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்த நிலையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வந்தது. பண்டிகை நாட்களில் தங்கத்தின் விலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இது போன்ற சிறப்பு நாட்களாக இல்லாமல் இருக்கும் சாதாரண நாட்களில் தங்கத்தின் விலை குறைந்து காணப்படும்.
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மோசடி எச்சரிக்கை!
தற்போது தொடர்ந்து பண்டிகை காலமாக இருந்து வருவதால் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 120 உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் ஆபரணத் தங்கம் சவரன் ரூ.35,856-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,482 க்கு விற்பனை ஆகிறது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.69.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.