தரம் உயரும் சென்னை ஈசிஆர் சாலை- நெடுஞ்சாலை துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!

0
தரம் உயரும் சென்னை ஈசிஆர் சாலை- நெடுஞ்சாலை துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!
தரம் உயரும் சென்னை ஈசிஆர் சாலை- நெடுஞ்சாலை துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!
தரம் உயரும் சென்னை ஈசிஆர் சாலை- நெடுஞ்சாலை துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் ஈசிஆர் சாலை ஆறு வழிச் சாலையாக தரம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக மாநில நெடுஞ்சாலை துறை தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஈசிஆர் சாலை:

சென்னையில் கடந்த ஆட்சியின் போது சென்னை – சேலம் சாலையை ஆறு வழிச்சாலை ஆக மாற்ற திட்டமிடப்பட்டது. ஆனால் அப்போது அதற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில் தற்போது சென்னை – சேலம் சாலையை அடுத்து ஈசிஆர் சாலை ஆறு வழிச்சாலை ஆக மாற்ற தமிழக நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது. அதன் படி ஈசிஆர் சாலையில் இருபுறமும் 11 மீட்டர் அகலத்தில் 6 வழிச் சாலையாக தரம் உயர்த்தும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு – இதை செய்தால் வாகனம் பறிமுதல்!! எச்சரிக்கும் உயர்நீதிமன்றம்!!

Exams Daily Mobile App Download

மேலும் புதுச்சேரி – மாமல்லபுரம் சாலை நான்கு வழித்தடமாக மேம்படுத்தப்படும் என்றும் இதற்காக ரூபாய் 1834 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் மாநில நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது. அதேபோல் புதுச்சேரி முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழிசாலைக்கு ரூ.6845 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் நெடுஞ்சாலைத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சாலைகள் விரிவுபடுத்துவதற்கு நிலம் கையகப்படுத்தப்படும் நடவடிக்கை விரைவில் தொடங்கும் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!