சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. இன்று நகை விலை குறைந்துள்ளதை அடுத்து நகைப்பிரியர்கள் மற்றும் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நேரத்தை பயன்படுத்தி நகைகள் வாங்க முற்பட்டு வருகின்றனர்.
தங்கம் விலை:
இந்தியாவில் கடந்த வருடம் விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் உயர்ந்த தங்கம் விலை தற்போது வரை குறையவில்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆபரணத் தங்கம் விலை அமெரிக்க டாலரின் மதிப்பை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஏற்பட்ட உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரின் விளைவால் கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. மேலும் பங்குச்சந்தையும் சரிந்து வருகிறது. அதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கி விட்டனர். அதனால் உலகம் முழுவதும் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதனையடுத்து தங்கத்தின் ஏற்றுமதியும், இறக்குமதியும் அதிகரித்துள்ளது.
Exams Daily Mobile App Download
அதனால் ஆபரணத்தங்கத்தின் விலை ஏற்றம் அடைந்து வருகிறது. உலகளவில் தங்கத்தை கொள்முதல் செய்வதில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா தான் உள்ளது. ஏனெனில் இந்தியாவில் தங்கத்தால் ஆன அணிகலன்களை அணிவதில் பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அதனால் தங்க விற்பனை மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிகம். இந்த நேரத்தில் தங்கத்தின் மீதான GST வரி 3% உயர்த்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இறக்குமதி வரியையும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதனால் தங்கத்தின் விலை எதிர்பாராத அளவு அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்துள்ளது.
இதனையடுத்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.37,088-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.40 குறைந்து, ரூ.4,636-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.90 குறைந்து, ரூ.60.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய நிலவரப்படி தங்கம் விலை குறைந்துள்ளது, மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்