சென்னை தினத்தையொட்டி 2 நாட்கள் கலை நிகழ்ச்சிகள் – மாநகராட்சி ஏற்பாடு!
சென்னையில் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி சென்னை தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில், சென்னை தினத்தை சிறப்பிக்கும் விதமாக 2 நாட்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்த சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
சென்னை தின கொண்டாட்டம்
1639ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சென்னை மாநகரம் கடந்த 383 ஆண்டுகளில் பல்வேறு நிலைகளை கடந்து வளர்ச்சி பாதையில் நின்று கொண்டிருக்கிறது. சென்னை தான் பல மனிதர்களையும் வாழ வைத்து கொண்டிருக்கின்றது. இந்த வகையில் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி சென்னையின் பெருமைகளை போற்றும் விதமாக சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு சென்னை தினத்தை சிறப்பிக்கும் விதமாக பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதியில் இரண்டு நாட்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகளில் இழுபறி? தேர்வர்கள் அதிருப்தி!
அதாவது, ஆகஸ்ட் 20, 21 ஆகிய ஆகிய இரண்டு நாட்களும் இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடைபெறும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும், நாளை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு வரைக்கும் நிகழ்ச்சி நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அதாவது, இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், உணவுத்திருவிழா மற்றும் சென்னையின் தொன்மை குறித்த புகைப்பட கண்காட்சிகள் மற்றும் குழந்தைகளுக்கான பாரம்பரிய விளையாட்டு என அனைத்தும் இடம்பெற இருக்கிறது.
மேலும், சென்னையின் பெருமையை மக்களுக்கு பறைசாற்றும் விதமாக ஓவியம், புகைப்படம், குறும்படம் மற்றும் சமூக வலைதள போட்டிகளை ஆன்லைன் மூலமாக நடத்தவும் சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. மேலும், இது போன்ற ஆன்லைன் போட்டிகளில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்குள் சென்னை மாநகராட்சி இணையத்தள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்