ரூ.346 கோடி சொத்து வரி நிலுவை – உடனடியாக செலுத்த மாநகராட்சி அறிவுரை!

0
ரூ.346 கோடி சொத்து வரி நிலுவை - உடனடியாக செலுத்த மாநகராட்சி அறிவுரை!
ரூ.346 கோடி சொத்து வரி நிலுவை - உடனடியாக செலுத்த மாநகராட்சி அறிவுரை!
ரூ.346 கோடி சொத்து வரி நிலுவை – உடனடியாக செலுத்த மாநகராட்சி அறிவுரை!

2022 – 2023ம் நிதியாண்டு முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சொத்து வரியை செலுத்த உடனடியாக செலுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தற்போது வரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சொத்து வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

சொத்து வரி:

தமிழகத்தில் சொத்து மதிப்பீடுகளின் அடிப்படையில் சொத்து வரி விதிக்கப்பட்டு வருகிறது. இந்த வரியை 6 மாதத்திற்கு ஒரு முறை மக்கள் செலுத்த வேண்டியது கட்டாயம். இந்த சொத்து வரியின் வாயிலாக நகரங்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல், திட கழிவுகளை அகற்றுதல், தெருவிளக்கு , பூங்காக்கள், சாலைகள் ஆகியவற்றை பராமரித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

இந்த நிலையில் 2022 – 2023 நிதியாண்டு முடிவடையவுள்ள நிலையில் இன்னும் ஏராளமானோர் சொத்து வரியை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். அவர்கள் உடனடியாக சொத்து வரியை செலுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. இதுவரை சுமார் 346 கோடி சொத்து வரி நிலுவை உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட பயனாளிகளுக்கு ஹாப்பி நியூஸ் – மாதம் ரூ. 20,000 வரை கிடைக்கும்!

இதில் மாநகராட்சிக்கு உட்பட பகுதிகளில் மட்டும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சொத்து வரியை செலுத்தாமல் உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சொத்து வரியை உடனடியாக செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும் மக்கள் சொத்து வரியை இ – சேவை மையங்கள் பணப் பரிமாற்று செயலிகள் வாயிலாக செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!