தமிழகத்தில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு – முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்!

0
தமிழகத்தில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு - முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்!
தமிழகத்தில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு - முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்!
தமிழகத்தில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு – முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்!

தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று பரவலை தடுக்கும் விதமாக பொது மக்கள் வெளியே செல்லும் போது கட்டாயமாக முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தி சென்னை மாநகராட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் தொற்று

உலகளவில் கிட்டத்தட்ட 54 நாடுகளை ஆக்கிரமித்துள்ள ஒமிக்ரான் வைரஸ் தொற்று இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது தொற்று பாதித்த நாடுகளில் இருந்து இந்தியா திரும்பிய சுமார் 21 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் மீண்டுமாக நாடு தழுவிய பொது முடக்கம் அறிவிக்கப்படுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ள நிலையில், ஒமிக்ரான் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மக்கள் முகக்கவசங்களை அணிய வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்ட பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.40,000/-

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு தகுதியுடைய ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி போடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – அரசு பதிலளிக்க வலியுறுத்தல்!

மேலும் சென்னை மாநகரில் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் செயல்பட்டு வரும் வணிக வளாகங்கள், அங்காடிகள், மார்க்கெட் போன்ற பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கை பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஏனென்றால் உலக நாடுகளில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் ஒமிக்ரான் வகை மாறுபாடு இந்தியாவிலும் ஒரு சில மாநிலங்களில் கண்டயறியப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

Post Office இல் சூப்பர் சேமிப்பு திட்டம் – ரூ.5000 முதலீட்டில் லட்ச ரூபாய் வருமானம்?

அந்த வகையில் முறையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீதும், முகக்கவசம் அணியாத தனி நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும். இனி வரும் நாட்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதால் வெளி இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தவறாது தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இதனை பின்பற்றி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்படுகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!