தமிழகத்தில் போகி பண்டிகையின் போது இதை செய்ய தடை – சென்னை மாநகரட்சியின் அதிரடி உத்தரவு!!
தமிழகத்தில் போகி பண்டிகைக்கு பழைய பொருட்களை பொதுமக்கள் எரிப்பார்கள். இதனால் காற்று அதிகமான அளவு மாசு அடைகிறது. இதனை தடுக்கும் விதமாக சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
போகி பண்டிகை:
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதால் இந்த ஆண்டு கோலாகலமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதன்படி வருகிற ஜனவரி 14ம் தேதி போகி பண்டிகை தொடங்கி ஜனவரி 17ம் தேதி காணும் பொங்கல் வரை மொத்தம் 4 நாட்கள் என பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதில் மார்கழி கடைசி நாளன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழக மின் ஊழியர்கள் – நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!
இப்பண்டிகை தினத்தன்று பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் பழைய பொருட்களை தீயில் போட்டு எரிப்பார்கள். இதனால் காற்று அதிகமான அளவு மாசுபாடு அடையும். இதனை தடுக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், வருகிற 13 மற்றும் 14ம் தேதிகளில் பொதுமக்கள் தங்களிடையே பயன்பாட்டில் இல்லாத பொருட்களை தவிர்க்க வேண்டும்
Follow our Instagram for more Latest Updates
அத்துடன் டயர், பழைய துணி, பிளாஸ்டிக், ரப்பர் டியூப் ஆகியவற்றை எரிக்காமல் மாநகராட்சியின் தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து சென்னையில் 1 முதல் 15 வரையிலான மண்டலங்களில் பேட்டரியால் இயங்கும் 3 சக்கர வாகனங்கள் வாயிலாக ஆடியோ மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.