சென்னையில் மாதம் ரூ.90 ஆயிரம் சம்பளத்துடன் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசு சார்பில் செயல்படும் சென்னை மாநகராட்சி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற மருத்துவர்கள் தேவை என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மருத்துவர்கள் தேவை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய அரசு பல நடவடிக்கைளை எடுத்துள்ளது. கொரோனா பரவல் அதிகரிக்கும் போது பல மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லாமல் மக்கள் சிரமமடைந்தனர். இதனால் அரசு தரப்பில் பல்வேறு மருத்துவமனைகளில் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு தற்காலிகமாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் சென்னை மாநகராட்சி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற மருத்துவர்கள் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மாதம் ரூ.90 ஆயிரம் மாதம் சம்பளம் வழங்கப்படும் எனவும் அவர்கள் 11 மாத காலத்திற்கு மட்டுமே பணியாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 41,157 பேருக்கு கொரோனா உறுதி – 518 பேர் உயிரிழப்பு!
மகப்பேறு நல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், பொது மருத்துவர் ஆகியோர் தேவை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்த பணியிடங்களில் சேர விருப்பமுள்ள மருத்துவர்கள் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களை ஜூலை 22 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் வரும் 27 ஆம் தேதி சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இந்த பணிகளுக்கான நேர்முகத் தேர்வு நடைபெறும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.