பள்ளிகள் திறப்பது குறித்த வழிமுறைகள் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!
தமிழகத்தில் பள்ளிகள் வருகிற ஜனவரி மாதம் 19-ஆம் தேதி முதல் திறக்க அறிவிப்பு வெளியாகிய நிலையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் பள்ளிகள் திறந்தால் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து மாநகர கல்வி அலுவலர் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி பள்ளிகள் திறப்பு:
சென்னை மாநகர தலைமை அலுவலர் பாரதிதாசன் தலைமையில், வருகிற 19-ஆம் தேதி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறந்தபின் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் மாநகர தலைமை அலுவலர் கூறியதாவது, “பள்ளிகள் வருகிற ஜனவரி 19-ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன. சென்னை மாநகராட்சியின் கீழ் 38 உயர்நிலை பள்ளிகள் உள்ளன. அதில் 10-ஆம் வகுப்பு மாணவர்கள் 6800 பேர் பயிலுகின்றனர். அதே போல் 32 மேல்நிலை பள்ளிகள் உள்ளன. அதில் 5900 மாணவர்கள் 12-ஆம் வகுப்பு படிக்கின்றனர்.
தமிழகத்தில் வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடத்தப்படும் – பள்ளிக்கல்வித்துறை முடிவு!!
இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க அந்த பள்ளிகளில் பாதுகாப்பு வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி பள்ளி வளாகங்கள் தினமும் இருவேளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். ஒரு வகுப்பில் 25 மாணவர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு மேஜையில் 3 மாணவர்கள் என சமூக இடைவெளி விட்டு அமரவேண்டும். 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வகுப்பு எடுப்பார்கள்.
பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி கல்வியை ஊக்குவிக்க 10 அடல் ஆய்வகங்கள் – இஸ்ரோ அறிவிப்பு!!
ஒவ்வொரு மாணவர்க்கும் 5 நிமிட இடைவெளி வீதம் அவர்கள் உடல் வெப்பம் கணக்கிடப்படும். அவர்கள் பள்ளிக்கு வரும்போதும், வெளியே செல்லும் போதும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். பள்ளியில் உள்ள மாணவர்களின் உடல்நிலை குறித்த கணக்கெடுப்பை பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் தினமும் கண்காணித்து தொகுப்பு தயார் செய்து மாநகராட்சிக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்”, இவ்வாறு அவர் கூறினார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்