சென்னையில் தேர்வில்லாத தமிழக அரசு வேலை – உடனே விரையுங்கள்..!
சென்னை மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியாகியது. இந்த அறிவிப்பின் படி, MTS, Security Guard, Animal Keeper ஆகிய பணிகளுக்கு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இப்பதிவில் நாங்கள் தொகுத்துள்ள தகவல்களை அறிந்த பின்னர் தங்களின் பதிவுகளை எளிமையாக செய்து பயனடையவும்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வேலைவாய்ப்பு விவரங்கள்:
- சென்னை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள Multi Tasking Staff பணிக்கு என 11 பணியிடமும், Security Guard பணிக்கு என 2 பணியிடமும், Animal Keeper பணிக்கு என 2 பணியிடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
- MTS, Security Guard, Animal Keeper ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழில் நன்கு எழுத, படிக்க தெரிந்தவராக இருந்தால் போதுமானதாகும்.
Exams Daily Mobile App Download
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியமானதாகும்.
- விண்ணப்பதாரர்கள் வயது தளர்வு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
- மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு மாதந்தோறும் ரூ.8,000/- ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.
- இப்பணிகளுக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் தபால் செய்ய வேண்டும். 20.06.2022 ம் தேதி வரை விண்ணப்பங்கள் வந்து சேர கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதால், இன்றே விண்ணப்பித்து பயனடையவும்.