ITI படித்தால் தமிழக அரசில் வேலை ரெடி – உடனே விரையுங்கள்..!
சென்னை கலெக்டர் அலுவலகம் சமீபத்தில் Apprentice பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மேற்கண்ட Apprentice பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
Chennai Collector Office வேலைவாய்ப்பு விவரங்கள்:
- சென்னை கலெக்டர் அலுவலகம் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, Apprentice பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் விண்ணப்பதாரர்கள் இதுவரை NAC Apprentice முடிக்காத நபர்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளலாம்.
- இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.8000/- வரை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் தகவல்களை அறிவிப்பில் காணலாம்.
தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Apprentice விண்ணப்பிக்கும் முறை:
இந்த தமிழக அரசு பணிக்கு விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வடிவில் தயார் செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்று கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு நிலையில், நாளை நடைபெறும் நேர்காணலில் தவறாமல் கலந்து கொண்டு பயனடையலாம்.