44வது சென்னை புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு – ரூ.10 கோடிக்கு விற்பனை!!

0
44வது சென்னை புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு - ரூ.10 கோடிக்கு விற்பனை!!
44வது சென்னை புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு - ரூ.10 கோடிக்கு விற்பனை!!
44வது சென்னை புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு – ரூ.10 கோடிக்கு விற்பனை!!

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற 44வது புத்தக கண்காட்சி இன்றுடன் முடிவடைகிறது. அதிகபட்சமாக 9 லட்சம் பேர் புத்தக கண்காட்சிக்கு வந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

புத்தக கண்காட்சி:

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமான ‘பபாசி’ யின் சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் புத்தக கண்காட்சி மிகவும் பிரம்மாண்டமாக நடக்கும். நடப்பு ஆண்டில் கொரோனா தொற்றின் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கால் ஜனவரி மாதத்தில் புத்தக கண்காட்சி நடைபெறவில்லை. இந்நிலையில் பிப்ரவரி 24ம் தேதி அன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 44வது புத்தக கண்காட்சி நடந்தது.

தன்னார்வ தொண்டர்களாக பணிபுரிய ஆசையா ? – நாள் ஒன்றுக்கு ரூ.500/- மதிப்பூதியம் !

தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் கலை, இலக்கியம், கணிதம், தொழில்நுட்பம், வரலாறு, மருத்துவம், குழந்தைகளுக்கான புத்தகங்கள் போன்ற பல துறைகளை சேர்ந்த புத்தகங்களும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து 14 நாட்கள் புத்தக கண்காட்சி நடைபெற்றது.

TN Job “FB  Group” Join Now

தினமும் புத்தக கண்காட்சியில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் மொத்தம் 8 லட்சம் முதல் 9 லட்சம் வரையிலும் மக்கள் வருகை தந்துள்ளனர். பொதுவாக 10 லட்சம் வரையிலும் மக்களின் வருகை இருக்கும். நடப்பு ஆண்டில் ரூ.6 கோடி முதல் ரூ.10 கோடி வரையிலும் புத்தகங்ககள் விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!