மாவட்ட நலச் சங்கத்தில் ரூ.40,000/- சம்பளத்தில் வேலை – விரைவில் விண்ணப்பியுங்கள்..!
செங்கல்பட்டு மாவட்ட நலச்சங்கம் சில நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. Microbiologist, Lab Technician ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் குறைந்த நாட்கள் மட்டுமே மீதம் உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மாவட்ட நல சங்கம் வேலைவாய்ப்பு விவரங்கள்:
- செங்கல்பட்டு மாவட்ட நலச் சங்கத்தில் Microbiologist, Lab Technician ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
- Microbiologist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS, MD in Microbiology, M.Sc in Medical Microbiology Degree படித்தவராக இருக்க வேண்டும்.
- Lab Technician பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் DMLT Degree படித்தவராக இருக்க வேண்டும்.
- Lab Attendant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு படித்தவராக இருக்க வேண்டும்.
- Microbiologist பணிக்கு ரூ. 25,000/- முதல் ரூ.40,000/- வரை என்றும், Lab Technician பணிக்கு ரூ. 12,000/- என்றும், Lab Attendant பணிக்கு ரூ. 8,000/- என்றும் மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
செங்கல்பட்டு மாவட்ட நலச்சங்கம் விண்ணப்பிக்கும் வழிமுறை:
இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை பெற்று அதை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்கள் (30.06.2022) மட்டுமே கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.