எழில் அம்ரிதாவை காதலிக்கும் விஷயத்தை வீட்டில் போட்டு கொடுக்கும் செழியன் – ப்ரோமோ ரிலீஸ்!

0
எழில் அம்ரிதாவை காதலிக்கும் விஷயத்தை வீட்டில் போட்டு கொடுக்கும் செழியன் - ப்ரோமோ ரிலீஸ்!
எழில் அம்ரிதாவை காதலிக்கும் விஷயத்தை வீட்டில் போட்டு கொடுக்கும் செழியன் - ப்ரோமோ ரிலீஸ்!
எழில் அம்ரிதாவை காதலிக்கும் விஷயத்தை வீட்டில் போட்டு கொடுக்கும் செழியன் – ப்ரோமோ ரிலீஸ்!

கோபியை மன்னித்து ராதிகா ஏற்றுக்கொள்வாரா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் தற்போது எழில் அம்ரிதாவை காதலிக்கும் விஷயத்தை வீட்டில் சொல்லும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியை பற்றிய அனைத்து உண்மைகளும் ராதிகாவிற்கு தெரியவருகிறது. இத்தனை நாட்களாக பாக்கியா டீச்சர் தான் கோபியின் மனைவி என்கிற உண்மையை ராதிகாவிடம் கோபி கூற மறுத்து விட்டதால் கோபி மீது ராதிகா கொலை வெறியில் இருக்கிறார். ஆனாலும் கோபி விடுவதாக இல்லை. எப்படியாவது ராதிகாவை சமாதானம் செய்து ராதிகாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைக்கிறார். ராதிகா என்னை விட்டு போய் விடுவார் என்கிற பயத்தில் தானே உண்மையை மறைத்தேன் என நினைக்கிறார்.

TN Job “FB  Group” Join Now

எவ்வளவுதான் ராதிகா வீட்டைவிட்டு கோபியை துரத்தினாலும் கோபி ராதிகா வீட்டிற்கு வருவதை மட்டும் நிறுத்தவே இல்லை. ராதிகா வீட்டின் பக்கமே வர கூடாது என்று சொல்வதால் மயூவை பார்க்க கோபி மயூ படிக்கும் பள்ளிக்கே செல்கிறார். இனிமேல் கோபியிடம் நீ பேசவே கூடாது. அவரே உன்னை பார்க்க வந்தாலும் கூட நீ அவரை பார்க்க கூடாது. நான் ஏமாந்தவரைக்கும் போதும். நீயும் யாரையும் நம்பி ஏமாற கூடாது என மயுவிடம் ராதிகா கூறுகிறார். இதுமட்டுமல்லாமல் கோபி மீது பாக்கியாவிற்கும் சந்தேகம் வர ஆரம்பித்துவிட்டது. கோபி எதையோ மறைக்க நினைக்கிறார் என்பது பாக்கியாவிற்கு புரிகிறது.

ஜூன் 20ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு – இதற்காக தான்? அரசு விளக்கம்!

ஆனாலும், கோபியிடம் அதை காட்டிக்கொள்ளாமல் அமைதியாகவே இருக்கிறார். கோபி எப்படியாவது பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என நினைக்கிறார். ராதிகாவின் அம்மாவும் எப்படியாவது ராதிகாவையும் கோபியையும் சேர்த்து வைக்க வேண்டுமென நினைக்கிறார். இதற்கு இடையே எழிலும் அமிர்தாவிடம் பேசி தனது காதலை வளர்த்துக் கொண்டிருக்கிறார். அமிர்தாவிடம் எழில் பேசுவது செழியனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. தற்போது எழில் அமிர்தாவை காதலிக்கும் விஷயத்தை செழியன் வீட்டில் கூறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!