மீண்டும் ஏமாற்றும் கோபி, எச்சரித்த எழில் – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபியின் உண்மையான முகம் எழிலிற்கு தெரிந்துள்ள நிலையில் எழிலின் படத்திற்கு வரமுடியாமல் போனதை நினைத்து கோபி பாக்கியாவிடம் வருத்தப்பட்டு பேசுகிறார். அதனால் பாக்கியா எழிலை மன்னிப்பு கேட்க சொல்ல எழில் கோபியிடம் நடிப்பு எல்லாம் வேண்டாம் என சொல்லி மிரட்டுகிறார்.
பாக்கியலட்சுமி:
“பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி பாக்கியாவை ஏமாற்றி விவாகரத்து வாங்கிவிட அந்த விஷயம் தெரியாமல் குடும்பமே கோபியை நம்புகின்றனர். இந்நிலையில் குடும்பத்தில் ராமமூர்த்தி, எழில் செல்விக்கு கோபியை பற்றிய எல்லா உண்மையும் தெரியும். ஆனாலும் கோபி திருந்தாமல் இருக்கிறார். ராதிகாவுடன் எழில் கோபியை பார்த்துவிட என் அம்மாவிற்கு இதெல்லாம் தெரிந்தால் அவர் தாங்க மாட்டார் என்பதால் தான் உண்மையை மறைத்து இருக்கிறேன்.
சரவணனை புகழ்ந்த சந்தியா, ராஜா ராணி 2 சீரியலில் அடுத்த திருப்பம் – ரசிகர்கள் உற்சாகம்!
ஆனால் இந்த உண்மை எல்லாம் தெரிய வந்து இந்த குடும்பம் உடைந்து போகும் நிலை வந்தால் நான் சும்மா இருக்கமாட்டேன் உங்களை கொன்னுடுவேன் என மிரட்டுகிறார். இந்நிலையில் எழில் தன்னுடைய படத்தின் வெற்றிக்கு கோபியை வர வேண்டாம் என சொல்லி இருக்கிறார். அதை கோபி ஈஸ்வரி பாக்கியாவிடம் சொல்ல அதனால் பாக்கியா எழில் மீது கோவமாக இருக்கிறார். கோபி மீது பழி சொல்ல முடியாமல் இருக்கிறார். இந்நிலையில் பாக்கியா எழிலிடம் பேசாமல் இருக்கிறார்.
பாரதியை திருமணம் செய்து கொள்ளுமாறு கண்ணம்மாவிடம் கெஞ்சும் லட்சுமி – ப்ரோமோ ரிலீஸ்!
எழில் வந்து பேச பாக்கியா எழில் மீது பயங்கர கோவத்தில் இருக்கிறார். கோபியிடம் மன்னிப்பு கேட்டால் தான் நான் பேசுவேன் என சொல்ல எழிலை மன்னிப்பு கேட்க போக சொல்கிறார். அப்போது எழில் கோபியிடம் சென்று உங்களால் தான் அம்மா இவ்வளவு கோவமாக இருக்காங்க என்னமோ நல்ல அப்பா போல அவரிடம் பேசி இருக்கீங்க இப்படியே ஏமாற்றிக் கொண்டே இருந்தால் நான் சும்மா இருக்கமாட்டேன் என மிரட்டுகிறார்.