இந்தியாவில் மிகக் குறைந்த கட்டணத்தில் விமான சேவை? மத்திய அரசு விளக்கம்!

0
இந்தியாவில் மிகக் குறைந்த கட்டணத்தில் விமான சேவை? மத்திய அரசு விளக்கம்!
இந்தியாவில் மிகக் குறைந்த கட்டணத்தில் விமான சேவை? மத்திய அரசு விளக்கம்!
இந்தியாவில் மிகக் குறைந்த கட்டணத்தில் விமான சேவை? மத்திய அரசு விளக்கம்!

இந்திய விமான சேவைகளைப் பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவனங்களே வழங்கி வருகின்றன. இதற்கு மாற்றாக ஆகாசா ஏர் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள புதிய விமான நிறுவனத்தை ராகேஷ் ஜுன்ஜுன்வாலா தொடங்கி உள்ளார். இந்நிலையில் ஆகாசா ஏர் நிறுவனத்திற்கு, விமானப் போக்குவரத்து ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்த மிக குறைந்த கட்டண விமான சேவை வெற்றிபெற்றால் விரைவில் பல இந்தியர்களுக்கு விமான சேவையை நடத்துவதற்கு உந்து சக்தியைக் கொடுக்கும்.

விமான சேவை:

இந்தியாவின் ‘வாரன் பஃபெட்’ என்று அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யும் விமான நிறுவனத்தை கடந்த வருடம் ஆரம்பித்தார். இந்நிறுவனத்தின் முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பெருமளவு முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் வினய் துபே மற்றும் ஆதித்யா கோஷ் ஆகியோரும் இணைந்துள்ளனர். இந்தியாவில் விமான போக்குவரத்து அபிரிதமான வளர்ச்சியை அடையும் என்ற மிகப்பெரிய நம்பிக்கையை ராகேஷ் கொண்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக முதல் முறையாக ஒரு புதிய விமான சேவை வழங்கும் நிறுவனத்தை அவர் தொடங்கி, அந்தச் புதிய விமான சேவைக்கு `ஆகாசா’ என்று பெயர் சூட்டி இருந்தார்.

Exams Daily Mobile App Download

இந்தியாவில் விமான சேவை நடத்துவது என்பது மிகவும் சிரமமான விஷயமாக இருக்கிறது. கடந்த காலங்களில் நமது நாட்டில் பல விமான நிறுவனங்கள் தொடங்கப்பட்டாலும் மிகப்பெரிய நஷ்டம் காரணமாகப் பல நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. அதனால் ராகேஷின் இந்த முடிவு துணிச்சலான முடிவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் “ஆகாசா ஏர்” விமான நிறுவனத்திற்கு விமானப் போக்குவரத்து ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மேலும் விமானப் போக்குவரத்து ஆணையம் அனுமதி அளித்துள்ளதால் மிகவும் குறைந்த கட்டணத்தில் இந்த மாத கடைசியில் இருந்து ஆகாசா ஏர் விமான நிறுவனம் பயணிகள் விமான சேவையை தொடங்க உள்ளது.

இந்தியா முழுவதும் அதிகரித்து கொண்டே வரும் கொரோனா – ஒரே நாளில் 18,815 பேருக்கு பாதிப்பு!

மேலும் மிகவும் குறைந்த கட்டணத்தில் வரும் 2023, மார்ச் மாதத்திற்குள் சுமார் 18 விமானங்களை இந்தியாவில் இயக்க இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.படிப்படியாக வருடத்திற்கு 12 முதல் 14 வரை என ஐந்து ஆண்டுகளில் 72 விமானங்களை இயக்க உள்ளதாக தகவல்கள் கூறுகிறது. மேலும் அமெரிக்காவில் உள்ள சியாட்டில் பகுதியில் இந்த நிறுவனத்தின் விமானங்கள் வடிவமைக்கப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது.இந்த நிறுவனத்திற்கு QP என்ற ஏர்லைன் கோட் கிடைத்துள்ளது. மேலும் இதுபோன்ற குறைந்த கட்டண சேவை வழங்கும் விமானங்கள் குறைந்த அளவு எண்ணிக்கையிலான பயணியர் இருக்கைகளை கொண்டிருக்கும். ஒரு விமானத்தில் சுமார் 72 இருக்கைகள் இருக்கும் என தகவல்கள் கூறுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!